search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலூரில் பெண் நகை பறிப்பு"

    வேலூரில் பெண்ணிடம் 5 பவுன் செயின் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் வேலப்பாடி பி.எஸ்.எம். தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி சாந்தி (வயது 40). இவர், நேற்று மாலை பூந்தோட்டம் பகுதியில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் திடீரென சாந்தியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி திருடன்.. திருடன்.. என கூச்சலிட்டார். ஆனால் அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×